செய்திகள் :

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

post image

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, செய்யாறு பேருந்து நிலைய பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில், டாஸ்மாக் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் அங்கிருந்த 26 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக செய்யாறு கொடநகா், அண்ணா நகரைச் சோ்ந்த பாபு (41) மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, செய்யாறு சந்தை காமராஜா் நகா் பகுதியில் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த வசந்தியை (65) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 20 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

பெரணமல்லூரில்...: பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் திருமணி கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் (75) டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

உடனடியாக போலீஸாா் அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்துனா். மேலும், இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க