செய்திகள் :

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

post image

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடு பாதியாகக் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.

நவீன வாழ்வியல் முறைகளில் தூக்கமின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை முன்வைக்கிறது இந்தக் கணக்கெடுப்பு. 

Sleep

2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்குகின்றனர்

லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு தூக்கம் தொடர்பாக 40,000 நபர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதில் 61% ஆண்கள், 39% பெண்கள். 

இந்த அறிக்கையில், 39% பேர்தான் நிம்மதியாக 6-8 மணிநேரம் உறங்குவதாகவும் 39% பேர் 4-6 மணி நேரம்தான் உறங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்கும் நிலையில், 20% மக்கள் 4 மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். 

பெண்கள் வீட்டு வேலைகளால் தூங்க முடியவில்லை

கணக்கெடுக்கப்பட்டதில் 59% பேர் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தைப் பெறுகின்றனர். 

வருகின்ற மார்ச் 14ம் தேதி உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் 348 மாவட்டங்களில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 72% பேர் தூக்கத்தின் நடுவில் கழிப்பறை பயன்படுத்த வேண்டியிருப்பது சரியாகத் தூங்க முடியாததற்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளனர். 

washing

25% பேர் அதிகாலையில் வேலை  இருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். குறிப்பாகப் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டியிருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை என்ற காரணத்தைக் கூறியுள்ளனர். 

22% பேர் கொசுக்கள் மற்றும் வெளிப்புற சத்தங்களால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 9% பேர் பெற்றோர், குழந்தைகள் அல்லது குடும்பத்தினரால் ஏற்படும் தொந்தரவு காரணமாகத் தூங்க முடியவில்லை என்றும், மற்றொரு 9% பேர் தூக்கத்தில் மூச்சுக்கோளாறு போன்ற மருத்துவ பிரச்னைகளால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 

6% பேர் மொபைல் பயன்பாட்டால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 

தூக்கமின்மையின் பாதிப்புகள்:

இரவில் சரியாகத் தூங்க முடியாததை ஈடுசெய்ய வேலை நேரத்தில் பவர் நாப் செய்வது, மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது, வார இறுதியில் தாமதமாக எழுவது போன்ற பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அதிலும் 38% பேர் இப்படி வார இறுதிகளில் கூட ஈடு செய்ய முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தூக்கமின்மை

தூக்கமின்மை (Insomnia) இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறு, பக்கவாதம் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகளை இது ஏற்படுத்தும் என்பதனால் இது நிச்சயம் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று. 

லோக்கல் சர்கிள் நிறுவனர் சச்சின் தபாரியா, "பெரும்பாலான இந்தியர்கள் அதிக வேலை நேரம், பயண நேரம் காரணமாக 9 மணிக்கு மேல்தான் இரவு உணவை உட்கொள்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காகக் காலை வேலைகள் சீக்கிரமாகத் தொடங்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. தூங்கும் நேரமும் தூக்கத்தின் தரமும் மேம்பட வேண்டுமென்றால் இந்த நிலை மாற வேண்டும்." எனக் கூறியுள்ளார். 

Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் - என்னதான் தீர்வு? | In-Depth

நாய்க்கடியும், அதனால் வருகிற ரேபிஸ் தொற்றும், அதன் தொடர்ச்சியான மரணங்களும் தமிழக அளவில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சைப் பெற்றுகொண்டிருந்த புலம்... மேலும் பார்க்க

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுக... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவை பார்த்து எடை குறைத்த மகள்: ஆரோக்கியமானதா, அனுமதிக்கலாமா?

Doctor Vikatan: என்னுடைய 13 வயது மகள் மிகவும் அதிக உடல் பருமனுடன் இருந்தாள். கடந்த சில நாள்களாக திடீரென சோஷியல் மீடியாவை பார்த்து அவளாகவே ஏதோ டயட்டை பின்பற்றுகிறாள். அந்த டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிற... மேலும் பார்க்க

வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதென்ன 'ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?

Doctor Vikatan: என்நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்குகண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதைஇப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்று... மேலும் பார்க்க

Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்!

வெயில் காலத்தில் தர்பூசணிக்கு அடுத்து எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது முலாம் பழங்களைத்தான். இதை நறுக்கியதும் நாசியைத் துளைக்கும் மணமும் பளீர் ஆரஞ்சு நிறமுமே ஈர்க்கும். முலாம் பழத்தின் சத்துக்கள், சிற... மேலும் பார்க்க