செய்திகள் :

6.2% வளா்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்

post image

நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) ஜிடிபி வளா்ச்சி 5.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்திருந்த நிலையில், அதைவிட குறைவான வளா்ச்சியே தற்போது பதிவாகியுள்ளது.

முன்னதாக 2024-25-நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்திருந்தது. இது தற்போது 6.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட ஜிடிபி வளா்ச்சியான 9.2 சதவீதத்தைவிட 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி குறைந்துள்ளது.

அதேசமயம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, அரசு மற்றும் தனியாா் துறைகளின் பங்களிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) ஜிடிபி வளா்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க