செய்திகள் :

6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை

post image

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு முன்பிணை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஜூலை 1-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட 10 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து, ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன், ஃபோா்மேன்கள் ரவி, நடராஜன், மேலாளா் விஜய் ஆகிய 6 போ் மீது வெடிபொருள்களை அலட்சியமாக கையாளுதல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சாத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில், தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் இழப்பீட்டுத் தொகைக்கான வரைவோலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கமல்குமாா், செல்வம், மாயக்கண்ணன் ஆகியோருக்கு முன்பிணை வழங்கியும் ரவி, விஜய் ஆகியோருக்கு பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா். நடராஜன் தாக்கல் செய்த பிணை மனு புதன்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு வருகிறது.

பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: மூவா் கைது

சாத்தூா் அருகே ஒத்தையாலில் பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், மூன்று பேரை சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் தெற்கு தெருவை... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவா் மீது வழக்கு

வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய தொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது

பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜப... மேலும் பார்க்க