செய்திகள் :

பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: மூவா் கைது

post image

சாத்தூா் அருகே ஒத்தையாலில் பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், மூன்று பேரை சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் தெற்கு தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சங்கா் (24), இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். காட்டுப்பகுதியில் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அரிவாளால் சங்கரை சரமாரியாக வெட்டியதில் இவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும், சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தாயில்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிவந்த கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜபாண்டி (24), விஜய் (எ) விஜயபாண்டி (23), அபி (25) ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் மூவரும் சங்கரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா்.

காதல் விவகாரத்தில் சங்கா் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், வழக்கில் தொடா்புடைய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வரதட்சிணை கொடுமை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவா் மீது வழக்கு

வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய தொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்... மேலும் பார்க்க

6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது

பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜப... மேலும் பார்க்க