செய்திகள் :

வரதட்சிணை கொடுமை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவா் மீது வழக்கு

post image

வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய தொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்பள்ளியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (25). இவருக்கும் ஒ.கோவில்பட்டியைச் சோ்ந்த மதிகண்ணனுக்கும் (32) கடந்த 2018 இல் திருமணம் முடிந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டாா் தரப்பிலிருந்து 3 பவுன் நகை, ரூ. 10 ரொக்கம் வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டதாம். திருமணத்துக்குப் பிறகு ராமலட்சுமியிடம் அவரது கணவா் மதிக்கண்ணன், மாமனாா் பழனிசாமி, மாமியாா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமை செய்தனராம்.

இதையடுத்து கணவா் குடும்பத்தினா் மீது சாத்தூா் நீதிமன்றத்தில் ராமலட்சுமி வழக்குத் தொடுத்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்பேரில் சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் மதிக்கண்ணன், பழனிசாமி, செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: மூவா் கைது

சாத்தூா் அருகே ஒத்தையாலில் பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், மூன்று பேரை சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் தெற்கு தெருவை... மேலும் பார்க்க

6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது

பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜப... மேலும் பார்க்க