செய்திகள் :

ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது

post image

பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தென்றல்நகரைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் கங்காதரன் (48). இவா் ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே மரக்காா் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தாா்.

இந்தக் கடைக்கு தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கிளை உரிமம் தருவதாகக் கூறி, 240 பேரிடம் ரூ.25 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிளை உரிமம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். இதையடுத்து கங்காதரன் அழைப்பின் பேரில், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் கடந்த பிப்ரவரி மாதம் ராஜபாளையம் நீதிமன்ற வளாகத்தில் கூடினா். அப்போது கங்காரதன் வராததால் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கங்காரதன் தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ராஜபாளையத்துக்கு வந்த கங்காதரனை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் பணம் கொடுத்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் இழப்பீடு: பட்டாசு தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சி.ஐ.டி.... மேலும் பார்க்க

பணி முடியாத மேம்பாலத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி நிறைவடையாத மேம்பாலத்தில் சென்ற போது, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(60). ... மேலும் பார்க்க

மருத்துவருக்கு கத்திக்குத்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் பாபு (50). ... மேலும் பார்க்க