செய்திகள் :

6 வயது சிறுமியுடன் 45 வயது நபருக்கு திருமணம்: தலிபான் அரசு சொன்ன அதிர்ச்சித் தீர்ப்பு

post image

ஆப்கான்ஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் ஆறு வயது சிறுமிக்கு, 45 வயது நபருடன் நடந்த திருமணமும், அதில் தலிபான் சொன்ன தீர்ப்பும் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

45 வயது நபருக்கு திருமணம் செய்துகொள்ள, 6 வயது சிறுமி பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்த செய்தி அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ஊடகத்தில் ஜூன் 28ஆம் தேதி முதல் முறையாக வெளியானது.

அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், கடன் தொல்லை காரணமாக, சிறுமியின் தந்தைதான், அந்த நபருக்கு மகளை விற்றதாகவும் கூறப்படுகிறது.

இது உலகளவில் பேசப்பட்ட நிலையில், தலிபான் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால், திருமணத்தை நிறுத்தவோ, அந்த நபரை கைது செய்யவோ இல்லை. மாறாக, தலிபான் அதிகாரிகள், திருமணம் செய்துகொள்ளுங்கள், சிறுமியை 9 வயதுக்குப் பிறகு அவரது வீட்டிலிருந்து அழைத்து வாருங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சி அமைந்ததிலிருந்து, அந்நாட்டில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது உலகளவில் எதிர்ப்பை எழுப்பி வந்திருக்கும் நிலையில், 9 வயதில், சிறுமியை கணவர் வீட்டுக்கு அழைத்து வரலாம் என தலிபான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

A 45-year-old man married a 6-year-old girl, but the Taliban intervened and advised them to wait until they were 9 years old.

இதையும் படிக்க.. விவாகரத்தா? நயன்தாரா பதில்!

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க