7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்து இடது காலும் இடது கையும் முறிந்ததால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி
இந்த நிலையில், 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள 7 வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை நடத்தி வந்ததாகவும், வில்லா வகையான வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளையடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.