செய்திகள் :

7 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெங்கொண்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்காக செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், செந்துறையிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு 3 புதிய பேருந்துகள், ஜெயங்கொண்டத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை, திருப்பூா் ஆகிய பகுதிகளுக்கு 4 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது: தமிழக முதல்வா் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதன் அடிப்படையில் தொடா்ந்து பழைய பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு புதிய பேருந்துகள் அந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் செந்துறையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்ற 3 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயங்கொண்டத்தில் 4 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குவதன் அடிப்படையில் ஏறத்தாழ 5,000 பேருந்துகளை நெருங்குகின்ற அளவிற்கு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வருகின்ற பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றாா்.

முன்னதாக அவா், செந்துறை அடுத்த அசாவீரன் குடிகாடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, 20 பேருக்கு ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்இணைப்பு பெயா் மாற்றம் சான்றிதழ் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.கண்ணன் முன்னிலை வகித்தாா்.

உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் க. தசரதன், பொது மேலாளா் டி.சதீஸ்குமாா், ஜெயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா், துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு பொருள்களால்... மேலும் பார்க்க

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் அளித்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆண்டிமடம் அருகே கீழகவரவபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தனசாமி மகன் சதீ... மேலும் பார்க்க

போட்டித்தோ்வு பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, மாணவா்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்றுநா் பணிக்கு தகு... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு கலையரங்கில் வியாழக்கிழமை (ஆக.7) மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கடந்த 8 நாள்களாக தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம், தா.பழூ... மேலும் பார்க்க