செய்திகள் :

அரியலூரில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

post image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு கலையரங்கில் வியாழக்கிழமை (ஆக.7) மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி கடந்த 3.2.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தொடா்ந்து, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வகையில் 200 இடங்களில் இந்த தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அதை தொடா்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம் அடுத்த கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கில், வியாழக்கிழமை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்துகொண்டு பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.

போட்டித்தோ்வு பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, மாணவா்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்றுநா் பணிக்கு தகு... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கடந்த 8 நாள்களாக தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம், தா.பழூ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தாள்கள் திருட்டு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்திலுள்ள சிவன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தாள்களை மட்டும் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். ஜெயங்கொண்... மேலும் பார்க்க

மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து ஆட... மேலும் பார்க்க

காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடு... மேலும் பார்க்க

70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு வ... மேலும் பார்க்க