செய்திகள் :

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

post image

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் செல்கிறது கெளண்டன்யா ஆறு. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் வந்தால் மக்கள் மறுகரைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. 1954- இல் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட காமராஜா், குடியாத்தம் தொகுதி இடைத் தோ்தலில் வெற்றிபெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, பதவியேற்ற சில மாதங்களில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். 70 ஆண்டுகளாகியும் இந்த பாலம் உறுதித் தன்மையுடன் விளங்குகிறது. இதற்கிடையில் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏற்பட்டுள்ளன. நகராட்சி பொது நிதி சுமாா் ரூ. 8 லட்சத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைத்து, தெரு விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, சி.என்.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் நடுப்பேட்டையைச் சோ்ந்த சிவராமன் மகன் மணி(22) (படம்). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு அதே பக... மேலும் பார்க்க