செய்திகள் :

`85,000 ரூபாயா?' - ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் சாப்பிடப்பட்ட உணவின் பில் வைரல்! - பின்னணி என்ன?

post image

மத்தியப் பிரதேசத்தின் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் பத்வாஹி கிராமத்தில் ஜல் கங்கா சம்வர்தன் மிஷனின் கீழ் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்காக சிற்றுண்டி, பழங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.85,000 ரூபாய் செலவு செய்ததாக பில்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த பில் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், கிராம மக்கள் என்ன 24 பேர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் சிற்றுண்டி, உலர் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான ரசீதை சமர்ப்பிக்கும் போது ஆறு கிலோ முந்திரி, 3 கிலோ திராட்சை, 3 கிலோ பாதாம், ஒன்பது கிலோ பழங்கள், 5 டஜன் வாழைப்பழங்கள், 30 கிலோ சிற்றுண்டிகள் என அந்த பில்லில் இடம்பெற்றுள்ளது.

இந்த பில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி, ஒரு பஞ்சாயத்து கூட்டத்திற்கு இவ்வளவு செலவு தேவையா? என்று இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக ஷாஹ்தோல் மாவட்ட ஆட்சியர் கேதர் சிங் கூறுகையில் "நான் உலர் பழங்களை சாப்பிடுவதில்லை, கூட்டத்திலும் அவற்றை சாப்பிடவில்லை. நான் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியிருக்கிறார்.

இதில் ஏதேனும் மோசடி நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட பஞ்சாயத்து பொறுப்பு தலைமை நிர்வாக அதிகாரி முத்ரிகா சிங் கூறுகையில், ``உலர் பழங்கள் இருந்ததா அல்லது எவ்வளவு அளவு இருந்தது என்பது குறித்து எல்லாம் என்னால் இருட்டில் பார்க்க முடியவில்லை. நாங்கள் பில் குறித்து ஆய்வு செய்கிறோம். அங்கு நிறைய பேர் இருந்தனர்" என்று கூறியிருக்கிறார்.

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க