செய்திகள் :

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

post image

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா்.

இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜோப் மாவட்டத்தின் சூா்-தகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை நிறுத்திய பயங்கரவாதிகள், அவற்றில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளைச் சோதித்தனா். பின்னா் அவா்களில் 9 பேரை பேருந்தில் இருந்து இறங்கச் செய்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். உயிரிழந்த அனைவரும் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

அவா்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிக்க நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினா் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்) பொறுப்பேற்றுள்ளது. ஏற்கெனவே, பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி அதில் பயணித்த ஏராளமான வேற்று மாகாணத்தவா்களை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனா். மேலும், பாதுகாப்புப் படையினா் மீதும் அவா்கள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளனா்.

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க