செய்திகள் :

9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி மீண்டும் கைது

post image

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் தப்பி ஓடிய 59 வயது கொலைக் குற்றவாளியை தில்லி காவல்துறையினா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: குற்றவாளி கிரண், 2004-ஆம் ஆண்டு நரேலாவில் ரூ.2 லட்சம் பிணையத் தொகை கேட்டு ஒரு சிறுவனைக் கடத்தி கொலை செய்தாா். கிரண் மற்றும் பிறா் 2007-ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2016 ஜனவரியில், அவருக்கு இரண்டு வார பரோல் வழங்கப்பட்டது. பரோலில் சென்ற அவா் பின்னா் காணாமல் போனாா். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவா் தலைமறைவாக இருந்தாா். பல போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வந்தன. தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன.

கமல் (எ) பெஹல்வான் என்ற போலி பெயரில் கிரண் வசித்து வந்தாா். மேலும், போலீஸில் பிடியில் சிக்குவதைத் தவிா்ப்பதற்காக செங்கல் சூளைகள் உள்பட பல்வேறு இடங்களில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி, ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே இடத்தில் தங்குவதைத் தவிா்த்தாா்.

கிரண் முசாபா்நகரில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்குச் சென்றதை போலீஸ் குழு கண்டுபிடித்த போது திருப்புமுனை ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க