செய்திகள் :

Ashwin: "என் 100வது டெஸ்ட்டுக்கு தோனியை அழைத்தும் வரவில்லை; ஆனால்..." - சுவாரஸ்யம் பகிரும் அஷ்வின்

post image

'Leo - The Untold Story Of Chennai Super Kings' என்ற புத்தகத்தைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று ஒரு தனியார் ஹோட்டலில் நடந்திருந்தது. விழாவில் இசையமைப்பாளர் அனிருத், கிரிக்கெட் வீரர் அஷ்வின், முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்திருந்தனர்.

இந்நிகழ்வில் அஷ்வின் பேசுகையில், "தோனியை என்னுடைய 100 வது போட்டியில் நினைவுப்பரிசு வழங்க அழைத்தேன். அவரால் அப்போது வர முடியவில்லை. ஆனால், இப்போது அதை விடப் பெரிய பரிசைக் கொடுத்துவிட்டார்" எனப் பேசியிருக்கிறார்.

Anirudh

நிகழ்வில் அனிருத் பேசுகையில், "அஷ்வின் என்னுடைய பள்ளி சீனியர். அஷ்வின் ஓய்வை அறிவித்தபோது நானும் வருத்தமுற்றேன். என்னுடைய அக்கா வெளிநாட்டில் இருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர். அவரை அலுவலகத்தில் விடச் செல்கையில் பி.எஸ்.ராமன் சாரைப் பார்ப்பேன். எப்போதும் அலுவலகத்திலேயே இருப்பார். புத்தகம் எழுதும் அளவுக்கு அவருக்கு நேரம் இருந்தது ஆச்சரியம்தான். அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்கும் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆல் தி பெஸ்ட் சிஎஸ்கே. விசில் போடு!" என்றார்.

ஸ்ரீகாந்த் பேசுகையில், "சென்னை அணியில் தோனி என்னை விட இரண்டு மாதங்கள் ஜூனியர். என்னைத்தான் முதலில் விளம்பரத் தூதராக நியமித்தார்கள். அதன்பிறகுதான் தோனி கேப்டன் ஆக்கப்பட்டார். வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் கில் கிறிஸ்ட்டுக்கு எதிராக அஷ்வினை முதல் ஓவரில் வீச வைத்தார் என நினைக்கிறேன். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் எழுச்சி அங்கேதான் தொடங்கியது. அஷ்வின் டி20-யிலிருந்து ஓடிஐ பௌலரானார். ஓடிஐயிலிருந்து டெஸ்ட் பௌலரானார். அவர் பரிணமித்துக் கொண்டே இருந்தார். இப்போது பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்றார்.

Ashwin

கடைசியாக அஷ்வின் பேசுகையில், "என்னுடைய 100 வது டெஸ்ட் போட்டிக்கு நினைவுப் பரிசை வழங்க தோனியை அழைத்தேன். அப்போது அவரால் வர முடியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து வந்து மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்" என்றார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

WPL: மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ஹர்மன்ப்ரீத்; இரண்டாவது முறையாக சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.Harmanpreetமும... மேலும் பார்க்க

IPL 2025: "13 வயது வைபவை மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்துவேன்" - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல் Jio Hotstar இல் ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அதில் ஒளிபரப்பாகும் 'SuperStar' எனும் நிகழ்ச்சியில் வரவிருக்கும் ஐ.பி.எல் தொடர் பற்றி விரிவாகப் பேசியிரு... மேலும் பார்க்க

GOAT Bumrah: 'சரிந்துபோன குடும்பத் தொழில்; சிங்கிள் மதர் வளர்ப்பு - பும்ராவின் குடும்ப பின்னணி| Ep 2

'கிரிக்கெட் கனவுடன் குட்டிப் பையன்!'கன்னத்தை பிடித்துக் கிள்ளி கொஞ்சும் அளவுக்கு குழந்தைமை மாறாமல் இருக்கும் அந்த சிறுவனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் அவனுக்கு பௌலர்கள் மீதுதான் கண... மேலும் பார்க்க

Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில்லை?" - சோயப் அக்தர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உதவினார்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இறுதி வரை சென்று இந்திய அணி திரில்லாக வென்றிருந்தது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்திய அணி இந்தத்... மேலும் பார்க்க

Rohit Sharma: "ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேனா?" - வதந்திகள் குறித்து ரோஹித் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 2013 க்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை மீண்டும் இந்திய அணியிடமே வந்திருக்கிறது. டி20 உலகக்க... மேலும் பார்க்க