செய்திகள் :

Corona: "கொரோனாவால் எந்த உயிரிழப்பும் தற்போது ஏற்படவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

"உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்கக் கூடாது. கொரோனாவைப் பொருத்தவரை 2019 இறுதியிலிருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, காமா பிளஸ், ஒமேக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களைப் பெற்று வந்தது.

தற்போது, வந்துள்ள கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை 19 மாதிரிகள் பூனாவில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூன்று நாட்களிலிருந்து தொண்டை வலி, சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும்.

பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தீராத காய்ச்சல், நீண்ட நாள் தொண்டை வலி, சளி சரியாகாமலிருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பொதுமக்களுக்குப் பொதுவான அறிவுறுத்தலோ, விதியோ, சட்டமோ கட்டாயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்குச் செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால். அது நல்லது. இந்திய அளவில் கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்குப் பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை. 

தனியார் மருத்துவமனை உட்பட எங்கு அனுமதித்தாலும் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று சொல்லும் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது கொரோனா உள்ளிட்ட 12, 13 வகையான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

அதில், ஒன்று, இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாகக் கருத முடியாது. அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை.

கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஒன்றிய சுகாதாரத் துறை விதிக்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுகை திமுக: "மாவட்டச் செயலாளர் மதிப்பதில்லை" - ஒன்றிய செயலாளர்களின் ரகசியக் கூட்டம்; பின்னணி என்ன?

புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.கே.செல்லப்பாண்டியன். இவரை எதிர்த்துத்தான், தி.மு.க வடக்கு மாவட்டலிமிட்டுக்குள்வரும் 14ஒன்றியசெயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் ரகசியமாக எதி... மேலும் பார்க்க

'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கட்ச... மேலும் பார்க்க

2026 தேர்தல் : 'தயக்கம் காட்டும் கட்சிகள்; அமித் ஷா சொல்வது ஒரு வகையான பில்டப்' - திருமாவளவன்

2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டங்கள், மாநாடுகள் என பரபரப்பில் உள்ளது. இப்போது வரை, திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட... மேலும் பார்க்க

'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம... மேலும் பார்க்க

கீழடி : 'தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' - வைகோ

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயலுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒன்றிய அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவி... மேலும் பார்க்க

'திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது' - அமித் ஷாவை சாடிய நாஞ்சில் சம்பத்

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது..."தமிழில் பேசத் தெ... மேலும் பார்க்க