செய்திகள் :

CT Unfair Advantage: ``ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்..." - விமர்சனங்களுக்கு புஜாரா பதிலடி

post image

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியாவும், நியூசிலாந்தும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று மோதுகிறது. துபாயில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்தியா - Champions trophy
இந்தியா - Champions trophy

இதனாலேயே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று மைதாங்கள் இருந்தும் துபாய் மைதானத்தில் மட்டும் இந்திய அணியை ஆடவைப்பது நியாயமற்ற செயல், இது இந்தியாவுக்கு சாதமான செயல் என முன்னாள், இந்நாள் வீரர்கள் ஐ.சி.சி-யை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் நடத்துவது இந்தியாவுக்கு சாதகமானது என்று தான் நினைக்கவில்லை என இந்திய வீரர் புஜாரா தெரிவித்திருக்கிறார்.

புஜாரா ஓப்பன் டாக்

பிரபல தனியார் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய புஜாரா, ``சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே போட்டி அட்டவணை வெளியானது. மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாததற்குக் காரணம் பாதுகாப்பு வசதிதான். அதனால், ஐ.சி.சி-யும், பி.சி.சிஐ-யும் இணைந்து நடுநிலையான மைதானத்தை தேடின. அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான மைதானத்தில் விளையாடின. அதோடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே, இதனை நியாயமற்றது என்றும் இந்தியாவுக்கு சாதகமானது என்றும் நான் நினைக்கவில்லை.

புஜாரா
புஜாரா

ஒருவேளை, இந்தியா தோற்றிருந்தால் துபாயில் விளையாடுவது பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். இந்தியாவிடம் இருக்கும் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கைதான் இந்தியாவுக்கு சாதகம். எங்களிடம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், வருண் உள்ளனர். இந்த நான்கு பேரும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். இதுவே மற்ற அணிகளைப் பார்த்தால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பாகிஸ்தானிலும் தடுமாறுகிறார்கள். ஹர்திக் பாண்டியா உட்பட எங்களிடம் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். மேலும், பேட்டிங் யூனிட் நன்றாக இருக்கிறது . இந்திய அணியின் இந்த சமநிலையே வெற்றிக்கு காரணம்." என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma Speech: ``இந்த அணி என்னை நம்புகிறது"- நெகிழ்ந்த ரோஹித்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. ரோகித் சர்மா2013க்குப் பிறகு மீண்டும் இந்திய... மேலும் பார்க்க

IND vs NZ: ``கே.எல். ராகுல் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா!'' - ஹர்திக் பாண்டியா

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. Rohit SharmaIND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந... மேலும் பார்க்க

Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை

'தோனியின் அரியணையில் ரோஹித்!'சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணி வென்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெல்லும் இரண்டாவது ஐ.சி.சி கோப்பை இது. ... மேலும் பார்க்க