செய்திகள் :

Dhoni: `தோனியை கேப்டனாக நியமித்தாலும், இந்த அணி..!' - பாக். மகளிர் அணி முன்னாள் கேப்டன்

post image

சொதப்பிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என தனித்தனியே அத்தனை பேர் போட்டியை வென்று தரக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் தொடர் தோல்விகளை அணி சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் ஐ.சி.சி தொடரிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய பாகிஸ்தான், முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதோடு, பங்களாதேஷ் உடனான கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றாலும், பங்களாதேஷை விட குறைந்த ரன்ரேட்டால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது பாகிஸ்தான். இதனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்றோர் தங்கள் அணி வீரர்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

விமர்சிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்

அதற்கு, தனது சொந்த அணியை விமர்சிப்பது வீரர்களை மேலும் அழுத்தத்துக்குள்ளாக்கும் என்று பாகிஸ்தான் அணிக்கு ஆதரவுக்குரல் கொடுத்த யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், ``விமர்சிப்பவர்கள் தொலைக்காட்சி வர்ணனையில் அமர்ந்து கொண்டு பேசாமல், அணிக்கு பயிற்சியளியுங்கள். உங்களை இம்ரான் கான் வழிநடத்தினார். இப்போதைய அணிக்கு இம்ரான்கானைப் போன்றவர் இல்லை" என்றார். இந்த நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், இந்த அணிக்கு தோனியையே கேப்டனாக நியமித்தாலும் எதுவும் நடக்காது என்று விமர்சித்திருக்கிறார்.

Dhoni
Dhoni

கேம் ஆன் ஹை (Game On Hai) நிகழ்ச்சியில் பேசிய சனா மிர், ``சாம்பியன்ஸ் டிராபிக்கு 15 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, தோனி அல்லது யூனிஸ் கானை கேப்டனாக நியமித்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் யாரும் அணிக்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யாரும் விளையாட்டின் சூழ்நிலை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர்

முதலில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தபோதே நாம் பாதி தோற்றுவிட்டோம் என்று கூறியிருந்தேன். துபாயில் குறைந்தது ஒரு போட்டியாவது ஆட வேண்டும் என்று தேர்வுக்குழு தெரிந்தும், இரண்டு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்தார்கள். ஒருநாள் போட்டிகளுக்கு புதியவரான அப்ரார் அகமது, கடந்த ஐந்து மாதங்களில் 162 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு தொடர்களில் விளையாடிய முக்கிய வீரர்களை தேர்வாளர்கள் நீக்கிவிட்டனர்." என்று கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியதற்கான காரணம் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

AUS v AFG: குறுக்கிட்ட மழை... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்ப... மேலும் பார்க்க

Pakistan: ``இலவசமாக பயிற்சியளிக்க தயார்; ஆனால் 58 வயதில் என்னால் அவமானப்பட முடியாது" -வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடைபெறும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றிகூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அரங்கேறிய ஐ.சி.சி தொடரில் இப்படியா மோசமாக விள... மேலும் பார்க்க

AUSvAFG: அந்த மேக்ஸ்வெல்லை மறக்க முடியுமா? ஆஸியை பழிதீர்க்குமா ஆப்கன்; அரையிறுதி ஸ்பாட் யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபிபாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றுகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குரூப் A-ல் எந்தவொரு விறுவிறுப்பான ஆட்டமுமின்றி நியூசிலாந்து, இந்தியா, ஆகிய ... மேலும் பார்க்க

"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்... இந்தப் பெயரைக் கேட்டதும் இக்கால இளைஞர்களுக்கு இவரை வெறும் கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஆனால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஒரு... மேலும் பார்க்க

``இனியும் அவர்களின் வெற்றியை 'அப்செட்' என சொல்லாதீர்கள்!" - ஆப்கானிஸ்தான் அணியைப் பாராட்டும் சச்சின்

ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்... மேலும் பார்க்க

Dhoni: `One Last Time' - தோனிக்கு இதுதான் கடைசி சீசன்? சென்னை வந்த தோனியின் டி-ஷர்ட்டில் Morse Code

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்... மேலும் பார்க்க