செய்திகள் :

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா?

post image

Doctor Vikatan: என் 6 மாதக் குழந்தைக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது. காய்ச்சலும் வருகிறது. பிறந்த குழந்தைக்குமா ஃபிட்ஸ் வரும். இது பின்னாளில் அவன் வளர்ந்த பிறகும் தொடருமா, குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் இருக்குமா, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் கொடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் சஃபி.

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னையை, மருத்துவ மொழியில் 'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' (Febrile seizures) என்று சொல்வோம். பிறந்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியானது முழுமையடைந்திருக்காது. பொதுவாக, மூன்றரை வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி முழுமையடையாததால் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சிக்னல் கொடுக்கும் தன்மை சரியாக இருக்காது.

உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதைத் தவறாகப் புரிந்துகொள்வதால்தான் ஃபிட்ஸ் எனப்படும் வலிப்பு வருவதற்கான காரணம்.  'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' பிரச்னையானது, குழந்தை பிறந்த 3-4 மாதங்கள் தொடங்கி, 4 வயது வரை இருக்கும். இது பயப்பட வேண்டிய பிரச்னையல்ல. குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்த உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.

முன்பெல்லாம் இந்தப் பிரச்னைக்கு, குழந்தைக்கு ஆசனவாய் வழியே மருந்து கொடுக்கப்பட்டது. அதைக் கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தை நார்மலாகி விடும். அந்த மருந்து கொடுத்த பிறகும் அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது என்றால் அதை கவனிக்க வேண்டும்.  அது எந்த வகையான வலிப்பு நோய் என்று பார்க்க வேண்டும்.  வலிப்பு நோய்களில் மிகச் சாதாரணமானதும் அதிக பாதிப்பில்லாததுமாக இந்த 'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' வகையைச் சொல்வோம்.

எந்த வகை என்பதைத் தெரிந்துகொள்ள மூளைக்கு இஇஜி, ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும்.

பிறந்த 4 மாதங்களுக்கு முன்பே ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்தால், அது வேறு.  அது  ஃபிப்ரைல் சீஷர்ஸ் கிடையாது. அதேபோல  காய்ச்சல் இல்லாமல் ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்தால், அது எந்த வயதானாலும் அது வலிப்பு நோயில் சேரும். அது எந்த வகை என்பதைத் தெரிந்துகொள்ள மூளைக்கு இஇஜி (EEG) , ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். பிறகு குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சலோடு வரும்  ஃபிப்ரைல் சீஷர்ஸ் குறித்து பயப்படத் தேவையில்லை. 4 வயதுக்குப் பிறகு வராமல் பார்த்துக்கொள்ள முடியும். 

என்ன காரணம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். பிறகு நோயின் தீவிரத்தைப் பார்த்து, மருந்துகளைக் குறைக்கலாம். ஆனால், எந்த வகை வலிப்பு என்று தெரிந்தால்தான் இவற்றை எல்லாம் முடிவு செய்ய முடியும் என்பதால் நீங்கள் முறையான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: மலச்சிக்கல் பாதிப்பு; குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் திரிபலா பொடி உதவுமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் 10 வயதுக்குழந்தைக்கும், 70 வயது மாமனாருக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இன்று மலச்சிக்கல் பிரச்னை இந்த அளவுக்குத் தீவிரமாக என்ன காரணம்? மருந்து, மாத்திரைகளின்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை தமன்னா சொல்லும் pimple treatment; எச்சில் தடவினால் பரு மறையுமா?

Doctor Vikatan: நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு பருக்கள் அதிகம் வரும் என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது வெளிப்படைத் தன்மை பாராட்டுக்குரியதே. ஆனால், பருக்களை விரட்ட அவர் சொன்ன... மேலும் பார்க்க

Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?

வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது; கல் உப்பை சூரிய ஒளியில் காயவைத்து உபயோகித்தால் வைட்டமின் டி கிடைக்குமா என்கிற கேள்விகளை சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபு... மேலும் பார்க்க

Kerala: 2 ரூபாய் மருத்துவர் ரைரு கோபால் மறைவு; இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்; தலைவர்கள் இரங்கல்

கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ரைரு கோபால் நேற்று (ஆகஸ்ட் 3) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 80.கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமா... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிகள் போக்குமா?

Doctor Vikatan:நாட்டு மருந்துக் கடைகளில் புதினா உப்பு, ஓம உப்பு என்று விற்கிறார்கள். அந்த உப்பைத் தடவினால் உடல் வலிகள் சரியாகும் என்கிறார்கள். இது உண்மையா, இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம். விசேஷ நாள்களில் சாம்பிராணிப் புகையும் போடுவோம். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், அதைப் பார்த்துவிட்டு, ஊது... மேலும் பார்க்க