செய்திகள் :

Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

post image
எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது 'நியூரோலிங்க்' நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறகு, இவர்களுக்கு 2022ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பிறந்தது. தற்போது இவர்கள் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை ஷிவோன் சிலிஸ், "எங்களுக்கு அழகிய, அற்புதமான மகன் செல்டன் லைகர்கஸ் பிறந்திருக்கிறான். இந்த மகிழ்ச்சியான செய்தியை எலானிடம் சொல்லிவிட்டு, அவரது அனுமதியுடன் உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கிறேன். எங்களின் தங்க மகனை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷிவோன் சிலிஸின் எக்ஸ் பதிவிற்குச் சிவப்பு இதய ஸ்டிக்கரை பதிவிட்டு அன்பைத் தெரிவித்திருக்கிறார் எலான். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே அவருடைய முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஆறு குழந்தைகள் மற்றும் கனடா பாடகி கிரிமிஸ் மூலம் மூன்று குழந்தைகள் என 9 குழந்தைகள் இருக்கின்றன. ஆஸ்லே செயிண்ட் உடன் ஒரு குழந்தை. இந்நிலையில் தற்போது தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் பெற்றெடுத்த இந்த நான்காவது குழந்தையையும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் எலான் மஸ்க்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Tanushka Singh: `பயத்தை உணரவில்லை' - இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்

பறக்கும் படை அதிகாரியாக (Flying Officer) பணியாற்றி வந்த தனுஷ்கா சிங், இந்திய போர் விமானப்படையில் ஜாகுவார் போர் விமானத்தின் முதல் நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை போர் விமானப்படையில... மேலும் பார்க்க

வளர்ப்பு பூனை இறந்த துக்கம்; இரண்டு நாள்கள் சடலத்துடன்... 3-வது நாளில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தை சேர்ந்த பூஜா என்ற பெண் திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் தாயாருடன் வசித்து வந... மேலும் பார்க்க

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

பனி மலையில் 10 நாள்களாக சிக்கிய இளைஞர் - டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது எப்படி?

பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர், ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இ... மேலும் பார்க்க

புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர... மேலும் பார்க்க