செய்திகள் :

ENG vs IND: "அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்" - சுப்மன் கில் குறித்து கங்குலி

post image

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

25 வயதான இவர் இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

மேலும், கேப்டன் பதவியைப் பெற்ற பிறகு அவரது பேட்டிங் முன்னேறி இருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் 585 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி, சுப்மன் கில் குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 

“சுப்மன் கில் ஆடுவதிலேயே இதுதான் சிறந்த ஆட்டம் என்பதாகப் பார்க்கிறேன். ஆனால் இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.

அவரது செயல்பாடு அபாரமானதாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்வு புதிய திசையை நோக்கிச் செல்லும் என்று நம்புகிறேன்.

கங்குலி
கங்குலி

சுப்மன் கில் நீண்ட நாள் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பார். இப்போதுதான் கேப்டனாக ஆகியிருக்கிறார். இனி வரும் நாட்களில் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.

இங்கிலாந்து தொடரின் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவருக்கான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்லும்" என்று கங்குலி தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ENG vs IND: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் ஆர்ச்சர்... எதிரில் பும்ரா! லார்ட்ஸில் யாருக்கு மகுடம்?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிக... மேலும் பார்க்க

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் ... மேலும் பார்க்க

"பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பித் தரவேயில்லை" - தன்மீது புகாரளித்த பெண்மீது யஷ் தயாள் புகார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாக... மேலும் பார்க்க

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையி... மேலும் பார்க்க

ENG vs IND: ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' - இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறத... மேலும் பார்க்க

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் ... மேலும் பார்க்க