செய்திகள் :

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

post image

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார்.

கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒருங்கிணைத்த YouWeCan அறக்கட்டளையின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

விராட் கோலி

இதில் பல முக்கிய கிர்க்கெட் விரர்கள் கலந்து கொண்டுள்ளனர். யுவராஜ் சிங், ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் மற்றும் டேரன் கோஃப் ஆகியோருடன் மேடையில் இணைந்த கோலி, தனது கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டதைப் பற்றிப் பேசினார்.

"நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் தாடிக்கு வண்ணம் பூசினேன். நான்கு நாட்களுக்கு ஒருமுறை வண்ணம் பூச வேண்டிய நேரம் வரும்போது உங்களுக்குத் தெரியும்" என ஓய்வுபெறுவதை தாடியுடன் தொடர்புபடுத்தி பேசினார் விராட்.

36 வயதான விராட் கோலி, இந்தியாவின் ஃபிட்டான வீரர்களில் ஒருவராகப் பர்க்கப்படுகிறார். இதனால் அவர் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் அதிர்ச்சியானதாக அமைந்தது.

யுவராஜ், விராட்
யுவராஜ், விராட்

மேலும் அந்த நிகழ்ச்சியில் யுவாராஜ் சிங் உடனான நட்பு குறித்து பேசினார் விராட். "நானும் யுவராஜ் சிங்கும் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல பிணைப்பைக் கொண்டிருந்தோம். நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, ​​யுவி பா, பஜ்ஜு பா (ஹர்பஜன் சிங்) மற்றும் ஜாக் (ஜாஹிர்கான்) என்னைத் தங்கள் இறக்கைகளின் கீழ் பாதுகாத்தனர். டிரஸ்ஸிங் அறையில் என்னை சௌகரியமாக உணரச் செய்தனர்." எனப் பேசினார் விராட்.,

யுவராஜ் சிங் உடல் நிலை பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்தது குறித்து, "அவர் (யுவராஜ்) கேன்சர் சிகிச்சைக்குப் பிறகு கம்பேக் கொடுத்தது வியக்க வைத்தது. அப்போது நான் கேப்டனாக இருந்தேன். கட்டக்கில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்தார். அப்போது யாரிடமோ, "இது நாம் சின்ன வயதில் கிரிக்கெட் பார்த்ததைப் போல இருக்கிறதே" எனக் கூறியிருந்தேன்." எனப் பேசினார் விராட்.

"எனக்கு யுவராஜ் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. வேறு யாருக்காகவும் இதுபோன்ற ஒரு நிகழ்வுக்கு வரமாட்டேன்" என்றார்.

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தப் பிறகு பொதுவெளியில் கோலி தோன்றவில்லை. தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

"பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பித் தரவேயில்லை" - தன்மீது புகாரளித்த பெண்மீது யஷ் தயாள் புகார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாக... மேலும் பார்க்க

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையி... மேலும் பார்க்க

ENG vs IND: ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' - இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறத... மேலும் பார்க்க

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் ... மேலும் பார்க்க

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' - ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்... இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியி... மேலும் பார்க்க

"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்டர்

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாச... மேலும் பார்க்க