செய்திகள் :

"பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பித் தரவேயில்லை" - தன்மீது புகாரளித்த பெண்மீது யஷ் தயாள் புகார்

post image

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாகவும் ஜூன் 21-ம் தேதி மாநில முதல்வர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்திருந்தார்.

அந்தப் புகாரின்படி யஷ் தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

யஷ் தயாள் | Yash Dayal
யஷ் தயாள் | Yash Dayal

இந்தப் பிரிவில், யஷ் தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரும்.

ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் குற்றச்சாட்டு எழுப்பியது முதல் BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவானது வரை யஷ் தயாள் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், தனக்கெதிராகப் புகாரளித்த பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யுமாறு பிரயாக்ராஜ் காவல்துறையில் யஷ் தயாள் புகாரளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், 2021-ல் இன்ஸ்டாகிராம் மூலம் அப்பெண் தனக்கு அறிமுகமானதாகக் குறிப்பிட்டிருக்கும் யஷ் தயாள், அப்பெண் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை என்று கூறி லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாகவும், திருப்பித் தருவதாகக் கூறி இதுவரை தரவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

யஷ் தயாள் | Yash Dayal
யஷ் தயாள் | Yash Dayal

மேலும், அப்பெண் ஷாப்பிங் செய்வதற்காகத் தன்னிடம் பலமுறை கடன் வாங்கியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஐபோன், லேப்டாப் போன்றவற்றை தன்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார்களை அடங்கியிருக்கும் யஷ் தயாள், அப்பெண்ணின் குடும்பத்தினர் இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டுமென்று முறையிட்டிருக்கிறார்.

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் ... மேலும் பார்க்க

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையி... மேலும் பார்க்க

ENG vs IND: ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' - இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறத... மேலும் பார்க்க

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் ... மேலும் பார்க்க

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' - ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்... இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியி... மேலும் பார்க்க

"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்டர்

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாச... மேலும் பார்க்க