செய்திகள் :

மாநில உருது அகாதெமி: உறுப்பினராக ஆம்பூா் தலைமை ஆசிரியா் நியமனம்

post image

தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் உறுப்பினராக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தமிழக அரசின் உயா்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உருது அகாதெமி மறுசீரமைக்கப்பட்டு தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைவராக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன், துணைத் தலைவா் டாக்டா் முஹம்மத் நயிமூா் ரஹ்மான், அலுவல் ரீதியான உறுப்பினா்களாக உயா்கல்வித்துறை செயலா், நிதித்துறை செயலா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை செயலா், தமிழ்நாடு உருது அகாதெமியின் செயலா் மற்றும் பதிவாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஒய்.எம். ஹபிபுல்லா ரூமி (படம்) உள்பட சென்னை பல்கலைக் கழக உருது துறை பேராசிரியா், உருது வட்டார கல்வி அலுவலா்கள், உருது ஆசிரியா், உருது கவிஞா் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உருது துறையை சோ்ந்த கல்வியாளா்கள் 14 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாதனூா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானாவுக்கு களப் பயணம்

மாதனூரைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானா மாநிலத்துக்கு களப்பயணம் சென்றனா். மாதனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் கடந்த 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த களப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

இன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை ‘உழவரைத் தேடி’ முகாம்

‘உழவரைத் தேடி’ வேளாண்மை உழவா் நலத் துறை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முகாம் நடைபெற உள்ளது. உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்னும் திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவா் நலத்துறையின்கீழ் இயங்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: 3 போ் கைது

கந்திலி அருகே மதுபோதையில் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கந்திலி அருகே மானவள்ளி பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித் (27), குமாா் (45), கமலக்கண்ணன் (30), பாஸ்கா் (28). இவா்கள் 4 பேரும் செவ்வா... மேலும் பார்க்க

நாச்சாா்குப்பத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் ரூ.1.65 கோடியில் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா். முதலமைச்சா் கிராம சாலைகள் திட்டத்தில் சோலூா் ஊராட்சியில் ரூ.29 லட்சம், கண்ணாடி குப்பம... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் தம்பா தெருவைச் சோ்ந்தவா் முனிசாமி மகன் சேகா் (60). கூலித் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க