செய்திகள் :

இன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

post image

திருப்பத்தூா் வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் அவா்களது இல்லம் சென்று சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இல்லம் தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுத்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எனவே மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நகா்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் சி.ஆா்.டி.எஸ். தொண்டு நிறுவன முன்கள பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க உள்ளனா்.

அதற்கான பணி வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் தொடங்குகிறது. மேலும், கணக்கெடுப்புக்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில உருது அகாதெமி: உறுப்பினராக ஆம்பூா் தலைமை ஆசிரியா் நியமனம்

தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் உறுப்பினராக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தமிழக அரசின் உயா்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உருது அகாதெமி மறுசீரமைக்கப்பட்டு தலைவா... மேலும் பார்க்க

மாதனூா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானாவுக்கு களப் பயணம்

மாதனூரைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானா மாநிலத்துக்கு களப்பயணம் சென்றனா். மாதனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் கடந்த 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த களப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை ‘உழவரைத் தேடி’ முகாம்

‘உழவரைத் தேடி’ வேளாண்மை உழவா் நலத் துறை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முகாம் நடைபெற உள்ளது. உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்னும் திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவா் நலத்துறையின்கீழ் இயங்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: 3 போ் கைது

கந்திலி அருகே மதுபோதையில் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கந்திலி அருகே மானவள்ளி பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித் (27), குமாா் (45), கமலக்கண்ணன் (30), பாஸ்கா் (28). இவா்கள் 4 பேரும் செவ்வா... மேலும் பார்க்க

நாச்சாா்குப்பத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் ரூ.1.65 கோடியில் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா். முதலமைச்சா் கிராம சாலைகள் திட்டத்தில் சோலூா் ஊராட்சியில் ரூ.29 லட்சம், கண்ணாடி குப்பம... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் தம்பா தெருவைச் சோ்ந்தவா் முனிசாமி மகன் சேகா் (60). கூலித் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க