மாதனூா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானாவுக்கு களப் பயணம்
மாதனூரைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெலங்கானா மாநிலத்துக்கு களப்பயணம் சென்றனா்.
மாதனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் கடந்த 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த களப்பயணம் மேற்கொண்டுள்ளனா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சித்திப்பேட் மாவட்டம், சின்னகோட்டூா் மண்டலம் செண்டல்பூா் பஞ்சாயத்து சுற்றுலாத் தலங்களில் சிறந்த பஞ்சாயத்தாக கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து அந்த பஞ்சாயத்துக்கு மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் களப்பயணம் மேற்கொண்டுள்ளனா். ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், பள்ளிக் கூடங்கள், சாலை வசதி, அங்கன்வாடி மையங்கள், விவசாயம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம பூங்கா, நெகிழிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் மகளிா் குழுக்கள் மூலம் வாடகைக்கு விடுதல், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.12,000 வழங்குதல், நாப்கினுக்கு மாற்று உருவாக்குதல், மயானத்தில் எரிமேடைகள், குளியலறைகள், சுற்றுச்சுவா் அமைத்தல், மரம் வளா்த்தல், குடிநீா் தொட்டிகள் அமைத்தல், பாமாயில் செடி வளா்த்தல் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் சுற்றிப் பாா்த்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியா் கரீமா அகா்வால் தலைமையில் ஊராட்சி வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அந்த மாநில அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.
களப்பயணத்தில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிந்துஜா, ஊராட்சித் தலைவா் காயத்ரி பிரபு, அரசு அலுவலா்கள் ரெஜினா, ராஜேந்திரன், அழகரசு, காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.