செய்திகள் :

GST: "தீபாவளிக்குள் ஜி.எஸ்.டியில் மாற்றம்" - பிரதமர் மோடி பேசியது என்ன?

post image

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்.

செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, 103 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்று, மிக அதிக நிமிடங்கள் உரையாற்றிய சுதந்திர தின உரை இது தான்.

2017-ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி குறித்த முக்கியமான அறிவிப்பை ஒன்றையும் இந்த உரையில் அறிவித்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி | GST
ஜி.எஸ்.டி | GST

அது என்ன?

"இந்த தீபாவளியை, உங்களுக்கான டபுள் தீபாவளியாக மாற்ற உள்ளேன்.

கடந்த எட்டு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி பல்வேறு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் வரி சுமையைக் குறைத்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அதை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் வந்துள்ளது.

உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, ஜி.எஸ்.டி குறித்து ரிவ்யூ செய்துவருகிறோம். இதற்காக மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தத் தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி திருத்தம் வர உள்ளது. இதன் மூலம் வரி சுமை கணிசமாகக் குறையும். இதனால், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் பெரிதும் பலனடைவார்கள்" என்று பேசியுள்ளார்.

இந்தத் திருத்தம் மூலம் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள், சிறு, குறு, நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" - பிரதமருக்கு அவசர கடிதம்!

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்

தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.நாளை ... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்கள் நேரில் அஞ்சலி | Photo Album

இல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல... மேலும் பார்க்க

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க