செய்திகள் :

Hindi: "இந்தியாவில் இந்தியில்தான் பேசுவேன்" - வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி

post image

வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்த சம்பவம் கூட நடந்தது.

பெங்களூருவிலும் அது போன்ற ஒரு மொழிப் பிரச்னை எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்டுள்ளது.

தெற்கு பெங்களூருவில் உள்ள சந்தாபுரா என்ற இடத்தில் செயல்படும் எஸ்.பி.ஐ. வங்கிக்குப் பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றார்.

வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்
எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்

அவர் அங்கிருந்த பெண் மேலாளரிடம் கன்னடத்தில் பேசினார். ஆனால் வங்கி மேலாளர் அந்த வாடிக்கையாளரிடம் இந்தியில் பேசினார்.

உடனே பெண் வாடிக்கையாளர் மேலாளரிடம் கன்னடத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கன்னடத்தில் பேச மறுத்த மேலாளர், இது இந்தியா என்றும், இந்தியில்தான் பேசுவேன் என்றும் கூறி வாக்குவாதம் தெரிவித்தார்.

அதற்கு வாடிக்கையாளர் நீங்கள் கர்நாடகாவில் இருப்பதால் கன்னடத்தில் பேசித்தான் ஆகவேண்டும் என்று கூறினார்.

அதற்குப் பெண் மேலாளர், அதனால் என்ன என்றும், இது இந்தியா என்று கூலாகக் கூறினார். அதோடு எனக்கு நீங்கள் ஒன்றும் வேலை கொடுக்கவில்லை என்றும், கன்னடம் பேசமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வாடிக்கையாளர் தொடர்ந்து கன்னடத்தில் பேசினார். மேலாளர் இந்தியில் பேசி வாக்குவாதம் செய்தார்.

Hindi Language | இந்தி மொழி
Hindi Language

அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வாக்குவாதம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும். ஆனால் வெளிமாநிலத்திலிருந்து வரும் வங்கி ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து இந்தியில் பேசி உள்ளூர் மக்களிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந... மேலும் பார்க்க