செய்திகள் :

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

post image

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

ராகேஷும், அவரது மகனும் காலையில் தங்களது கடைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். நேற்று வழக்கம்போல் ராகேஷும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்ட நிலையில் மாலையில் ராகேஷ் தனது மனைவிக்கு போன் செய்தார்.

ஆனால் அவரது மனைவி போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராகேஷ் சீக்கிரமே வீட்டிற்கு புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.

வீட்டிற்கு சென்றபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பிளம்பர் உதவியோடு கதவை திறந்து பார்த்தபோது உள்ளே ரேணு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலையான ரேணு

உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொலையாளிகள் ரேணுவின் கை, கால்களை கட்டி, தலையில் பிரஷர் குக்கரால் அடித்து, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்திருந்தனர்.

கொலையாளிகள் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், 40 கிராம் தங்கத்தையும் திருடிச்சென்றனர். அதோடு கொலையாளிகள் கொலை செய்த பிறகு அங்கேயே குளித்துவிட்டு ரத்தக்கறை படிந்த உடைகளை அங்கேயே போட்டுவிட்டு வேறு ஆடையை அணிந்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அகர்வால் குடும்பத்தில் வீட்டு வேலை செய்த ஹர்ஷா மற்றும் பக்கத்து வீட்டில் வேலை செய்த ரோஷன் ஆகியோரைக் காணவில்லை.

அவர்கள் இரண்டு பேரும்தான் திட்டமிட்டு இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ரேணு அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். கொலை செய்து திருடிக்கொண்டு ரோஷன் வீட்டு உரிமையாளரின் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

கொலையாளிகள்

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு பேரும் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டுத் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அவர்களது சொந்த ஊர் ராஞ்சியாகும். எனவே அவர்களைத் தேடி தனிப்படை போலீஸார் ராஞ்சி விரைந்துள்ளனர்.

ஹர்ஷா கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் அகர்வால் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதற்குள் 14வது மாடியில் வீட்டு வேலை செய்து வந்த நபருடன் தொடர்பை ஏற்படுத்தி இருவரும் கூட்டு சேர்ந்து கொலை செய்துவிட்டு திருடிச்சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இ... மேலும் பார்க்க

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின... மேலும் பார்க்க

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் ப... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க

`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள்... மேலும் பார்க்க