செய்திகள் :

IPL 2025 Final: "மனவேதனையைத் தரும்" - ஷ்ரேயஸ், கோலி... யாருக்கு ஆதரவு? ராஜமௌலி ஓப்பன் டாக்

post image

நாளை (02.06.2025) IPL 2025 சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதும் இந்த போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை அதிரடியாக வென்று தகுதி பெற்றுள்ளது ஷ்ரேயஷ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஷ்ரேயஸ் ஐயர், விராத் கோலி
ஷ்ரேயஸ் ஐயர், விராத் கோலி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த அணி வெற்றிபெற்றாலும் புதிய சாம்பியன் உருவாவது உறுதி எனும் நிலையில், எந்த அணிக்கு சப்போர்ட் செய்வது என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழப்பம் பிரபலங்களுக்கும் பொருந்துகிறது. திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எந்த அணி வென்றாலும் தனக்கு மனவேதனைதான் எனக் கூறியுள்ளார் ராஜமௌளி.

எஸ்.எஸ். ராஜமௌலி
எஸ்.எஸ். ராஜமௌலி

"பும்ரா மற்றும் போல்டின் யாக்கர்களை 3rd மேன் பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அடிக்கும் விதம் அருமை...

ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி அவரை வெளியேற்றியது.

கொல்கத்தாவுக்குக் கோப்பையை வென்றுகொடுத்தார். ஆனால் அந்த அணியும் அவரைக் கைவிட்டது.

தற்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர்.

மற்றொருபுறம் விராட் கோலி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடுகிறார். ஆயிரம் ரன்கள் சேர்க்கிறார். அவருக்கான இறுதி எல்லையில் இருக்கிறார்... அவரும் கோப்பையை வெல்லத் தகுதியானவர்.

ரிசல்ட் எதுவாக இருந்தாலும்... அது மனவேதனையையே அளிக்கப் போகிறது." என எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார் ராஜமௌலி.

ராஜமௌலியின் பதிவுக்கு ரிப்ளை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, "ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டத்தை உங்கள் ப்ளாக்பஸ்டரில் ஒன்றைப் போல உணர்ந்தோம். பாகுபலி போன்ற தலைமை, ஆர்ஆர்ஆர் போன்ற எழுச்சி மற்றும் ஈகா பாணியில் கம்பேக்.

க்ளைமேக்ஸ் நெருங்குகிறது... தலைசிறந்த கதைசொல்லி அதை நேரலையில் பார்ப்பார் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என்பதை கமண்டில் தெரிவியுங்கள்!!!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க