வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்
Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா
தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

நேற்று இப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சேகர் கம்முலா சார் இயக்கத்தில் எதோ ஒரு மந்திரம் இருக்கிறது.
அதுதான் என்னை சமீராவாக (குபேரா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம்) இந்தளவிற்கு நடிக்க வைத்திருக்கிறது.
கலை மீதான அவருடைய காதல் எப்போதும் அவரது படங்களில் தெரியும். அதுதான் நான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்.
இந்த வாய்ப்பு கிடைத்தபோது, நான் முழுமையாக இப்படத்திற்காக என்னை ஒப்படைத்தேன். இன்று நீங்கள் சமீராவாகப் பார்க்கும் எல்லாமே அவருடைய பங்களிப்புதான்.
திறமையான நடிகர்களுடன் பணியாற்றும்போது நம்முடைய நடிப்பை உயர்த்த வேண்டிய பொறுப்பு இருக்கும். தனுஷ் சாருடன் சமீராவாக நடித்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

நாகார்ஜுனா சார்... அவரை ஒரு நடிகராகவோ, மனிதராகவோ வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரை மிகவும் போற்றுகிறேன். அவருடைய வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானது, அது எனக்கு உத்வேகம் தருகிறது.
குபேரா இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்புங்கள், இந்தப் படம் உங்கள் நேரத்தை வீணடிக்காது” என்று படக்குழுவினர் அனைவரையும் மென்ஷன் செய்து ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...