செய்திகள் :

Kumbh Mela: போனை ஆற்றில் முக்கிய மனைவி; வீடியோ காலில் புனித நீராடிய கணவர்; வைரலாகும் உபி பெண்!

post image

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்குப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். சில நேரங்களில் பெண்கள் அல்லது ஆண்கள் தங்களது கணவர் அல்லது மனைவியை விட்டுவிட்டு, தான் மட்டும் செல்வதுண்டு. அது போன்று ஷில்பா செளகான் என்ற பெண் தனது கணவர் இல்லாமல் உறவினர்களுடன் கும்பமேளாவிற்கு வந்திருந்தார்.

கும்பமேளாவில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஷில்பா புனித நீராடினார். அப்போது கணவர் அவருடன் இல்லாமல் இருந்தார். எனவே தான் புனித நீராடுவதைக் கணவர் பார்க்கவேண்டும் என்பதற்காகத் தனது மொபைல் போனில் கணவருக்கு வீடியோ கால் செய்தார். அவரது கணவர் படுக்கையில் படுத்தபடி மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.

அந்நேரம் கணவரும் புனித நீராடவேண்டும் என்பதற்காக வீடியோ காலில் தெரிந்த கணவருக்காகத் தனது மொபைல் போனை கங்கை ஆற்றில் ஒரு முறை மூழ்கடித்து எடுத்தார். அவ்வாறு செய்ததை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர் போன் தவறி ஆற்றில் விழுந்திருந்தால் அப்பெண்ணின் கணவர் நேரடியாக முக்தி அடைந்திருப்பார் என்று குறிப்பிட்டார். மற்றொருவர் அப்பெண்ணிடம், 'உங்களது கணவரிடம் உடையை மாற்றச்சொல்லி முடியைக் காய வைக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும்' என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் புனித நீராடல்

மற்றொருவர், 'ஆன்லைன் மூலம் புனித நீராடி, அவர் தனது பாவங்களைப் போக்கியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராமும் உங்களால் புனித நீராடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஷில்பாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. தனது உறவுகளைக் கும்பமேளாவிற்கு அழைத்து வரமுடியாதவர்கள் அவர்களின் புகைப்படங்களைத் திரிவேணி சங்கமத்தில் மூழ்கடித்து எடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் தங்களுடன் வராத உறவினர்களின் பெயர்களைத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் போது உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

கேரளா: ரயில் தீமில் கட்டப்பட்டுள்ள வீடு; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சொந்த வீடு கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும். அதையும் பார்த்து பார்த்து வித்தியாசமான முறையில் கட்டிக் கொள்கிறார்கள். வீட்டின் இன்டீரியர் டிசைன் எல்லாம் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு டிசைன் செய... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தேசிய கல்விக் கொள்கை விவகாரம் டு பாகிஸ்தானில் ICC தொடர்' - இந்த வார கேள்விகள்

தேசிய கல்விக் கொள்கை, டெல்லிக்கு புதிய பெண் முதல்வர், கேரளாவில் அதானி குழுமத்தின் அடுத்த ஐந்தாண்டு முதலீடு என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங... மேலும் பார்க்க

வெந்நீர் குளியல், தெய்வம், பாலுறவு... குரங்குகளைப் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

விலங்கினங்களில் குரங்குகள் தான் மனிதர்களின் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது நமக்குத் தெரியும்.சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றாலும் சரி பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் முதல் அருணாச்சலம் வரை திரைப்படங்களிலும் ... மேலும் பார்க்க

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க

Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக... மேலும் பார்க்க

Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபய... மேலும் பார்க்க