செய்திகள் :

Mookuthi Amman 2: ``திருஷ்டி எடுத்தது மாதிரிதான்'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குஷ்பு!

post image

`மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜினா ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் பூஜையும் பிரமாண்டமான முறையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது.

மூக்குத்தி அம்மன் 2
மூக்குத்தி அம்மன் 2

அந்தப் பூஜையே அப்போது கோடாம்பாக்கம் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் ஆனது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் தொடர்பாகவும் , நயன்தாரா பற்றியும் சமூக வலைதளப் பக்கங்களில் பல தகவல்கள் பேசப்பட்டது.

அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நடிகை குஷ்பு போட்டிருந்த சமூக வலைதளப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர், `` `மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துக் கொண்டிருக்கிறது.

சுந்தரி.சி, நான்சென்ஸான நபர் கிடையாது என அனைவருக்கும் தெரியும். நயன்தாரா தேர்ந்த நடிகர். அவர் அனைத்திற்கும் தகுதியானவர் என் நிரூபித்திருக்கிறார்.

Khusboo Instagram Story
Khusboo Instagram Story

அவர் முன்பு நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இந்த வதந்திகளெல்லாம் திருஷ்டி எடுத்தது மாதிரிதான்.

நடப்பது எல்லாம் நன்மைக்கே நடக்கும். என்டர்டெயின்மென்ட் கிங்கின் அடுத்த பிளாக்பஸ்டரை நோக்கி காத்திருங்கள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங்கம்புலி ஷேரிங்க்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த `மகாராஜா' திரைப்படம் நடிகர் சிங்கம்புலிக்கும் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. காமெடி வேடங்களில் நகைச்சுவைப் புயலாகச் சுற்றியவர் இந்தப் படத்தில் வில்லனாக களமிற... மேலும் பார்க்க

FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ``தயாரிப்பாளர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. ஃபெஃப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் ... மேலும் பார்க்க

Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த அப்டேட்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக... மேலும் பார்க்க

Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்!

நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்' படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது. சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்த... மேலும் பார்க்க

செருப்புகள் ஜாக்கிரதை விமர்சனம்: செருப்புக்குள் வைரம்... சிரிக்க வைக்கிறதா சிங்கம்புலி சீரிஸ்?

சென்னையில் வைரக் கடத்தலில் ஈடுபடுகிறார் ரத்னம். அப்படி ஒரு நாள் அவர் வைரத்தைக் கடத்திச் செல்லும்போது காவல்துறையினருக்கு ரத்னத்தைப் பற்றி எங்கிருந்தோ தகவல் பறக்கிறது. அதனைத் தொடர்ந்து ரத்னத்தைக் காவல் ... மேலும் பார்க்க