செய்திகள் :

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்..." - என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

post image

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நாக்பூரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது அவர், "டாக்டர் அப்துல் கலாம் அணு விஞ்ஞானியாகப் பல சாதனைகளைச் செய்துள்ளார். அதனால், அவரது பெயர் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஒரு மனிதன் அவனது சாதி, பிரிவு, மதம், மொழியால் உயர்ந்தவன் ஆவதில்லை. அவனது குணத்தினால்தான் உயர்ந்தவன் ஆகிறான் என்பதை நான் நம்புகிறேன். அதனால்தான், நாம் யாரையும் அவர்களது சாதி, பிரிவு, மதம், மொழி அல்லது பாலினத்தை வைத்து பாகுபாடுப்படுத்தக்கூடாது.

'வேலை தேடுபவராக இருக்காதீர்கள்; வேலையை உருவாக்குபவர்களாக இருங்கள்' - நிதின் கட்கரி

இந்த விஷயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எனக்கு ஓட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் என்னுடைய கூற்றுப்படி தான் இருப்பேன். 'சாதியைப் பற்றிப் பேசுபவரைக் கடுமையாக உதைப்பேன்' என்று ஒருமுறை 50,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசினேன்.

என்னுடைய இந்த நிலைப்பாட்டால் நான் பல பின்னடைவுகளைச் சந்திப்பேன் என்று என் நண்பர்கள் கூறினார்கள். நான் அதுகுறித்து கவலைப்படுவதில்லை. ஒருவர் தேர்தலில் தோற்பதால் இறந்துவிடுவார்களா என்ன? நான் கட்டாயம் என்னுடைய கொள்கைகளின் படிதான் என் வாழ்க்கையை நடத்துவேன்.

கல்வி உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு மட்டும் பலன் கொடுக்காது. அது இந்த நாட்டையும், சமுதாயத்தையும் மேம்படுத்தும். நீங்கள் வேலை தேடுபவராக இருக்காதீர்கள்; வேலையை உருவாக்குபவர்களாக இருங்கள்" என்று பேசியுள்ளார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Modi: 'நினைத்துப்பார்க்க முடியாத துயரம்' - கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்றி பேசியதென்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். அதில் கோத்ரா ரயில் விபத்தை நினைத்துப்பார்க்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டுள்ளார். கோ... மேலும் பார்க்க

`புத்தாண்டு, ஹோலி...' அடிக்கடி வியட்நாம் செல்லும் ராகுல் காந்தி; காரணம் கேட்கும் பாஜக

மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனிப்பட்ட பயணமாக வியட்நாம் சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த புத்தாண்டின் போதும், ராகுல் காந்தி வியட்நாம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்... மேலும் பார்க்க

US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு' - பின்னணி என்ன?

'காசா போரை நிறுத்த வேண்டும்...','உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்'... - இப்படி உலகில் எந்தெந்த நாடுகளில் போர்கள், தாக்குதல்கள் நடந்து வருகிறதோ, அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தும், அந்த நாடுகளின் மீது... மேலும் பார்க்க

Railway Exam: "தமிழக தேர்வர்களுக்கு 1,500 கிமீக்கு அப்பால் தேர்வு மையம்" - சு.வெங்கடேசன் கண்டனம்

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Vijay : 'விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்' - விஜய் காட்டம்

தமிழகத்தின் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார். அதில்,வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓ... மேலும் பார்க்க

ADMK: "இக்கட்டான சூழலில் இருக்கிறேன்; நான் என்ன பேசினாலும்..." - செங்கோட்டையன் சொல்வது என்ன?

அடுத்தடுத்த சர்ச்சைகளுக்குப் பிறகு, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.அந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன், "இக்கட்டான சூழலில் உங்க... மேலும் பார்க்க