செய்திகள் :

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோறும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், அந்த பகுதியில் இருக்கும் சில முதிர்ந்த மரங்கள் வாகனங்கள் மீது பெயர்ந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மரக்கடத்தல்

ஆபத்தான நிலையில் இருக்கும் அபாய மரங்களை வெட்டிக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் சோலூர் பேரூராட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. மணிக்கல் சாலையோரத்தில் உள்ள 40 ஆபத்து மரங்களை வெட்டிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட 40 மரங்களையும் தான்டி வருவாய் நிலம், முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 250 மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தியிருக்கிறார்கள். இது குறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து 2 நபர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவான முக்கிய நபரை தேடி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், " வருவாய்த்துறை நிலத்தில் இருந்த யூக்கலிப்டஸ் மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதை வருவாய்த்துறையினர் முறையாக கண்காணிக்கவில்லை. அந்த தைரியத்தில் வனத்துறை நிலத்தில் இருந்த மரங்களையும் வெட்டிக் கடத்தயிருக்கிறார்கள்.

சோலூர் பகுதியைச் சண்முகவேல், கோத்தகிரியைச் சேர்ந்த பிரவித்குமார்‌ ஆகிய இரண்டு பேரைக் கைது செய்திருக்கிறோம்.

மரக்கடத்தல்

தலைமறைவான கோத்தகிரியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தேடி வருகிறோம். மரம் வெட்ட அனுமதி வழங்கியதோடு மட்டுமின்றி சட்டவிரோத மரக்கடத்தல் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்தால் மட்டுமே இதுபோன்ற மரக்கொள்ளைகளை தடுக்க முடியும்" என்றனர்.

சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!

சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேத... மேலும் பார்க்க

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதி... மேலும் பார்க்க