செய்திகள் :

Operation Sindoor : 'இது ஓர் அவமானம்!' - இந்தியாவின் தாக்குதலுக்கு ட்ரம்பின் ரியாக்சன் என்ன?

post image

'ஆப்பரேஷன் சிந்தூர்!'

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் கருத்து கூறியிருக்கிறார்.

Operation Sindoor
Operation Sindoor

'ட்ரம்ப் ரியாக்சன்!'

பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 'இது ஒரு அவமானம். எங்களுக்கு அதைப் பற்றி இப்போதுதான் தெரிய வந்தது. கடந்த காலங்களில் நடந்தவற்றை வைத்து எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சண்டை பல தசாப்தங்களாக நீள்கிறது. அந்த சச்சரவுகளெல்லாம் வெகு விரைவில் தீரும் என நம்புகிறேன்.' என்று ட்ரம்ப் பேசியிருக்கிறார்

Donald Trump
Donald Trump

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது; அதனால்...' - அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த இந்தியா வம்சாவளி!

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா காங்கிரஸை சேர்ந்த ரோ கண்ணாவிடம் கேள்வி எழப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு ரோ கண்ணா, "இரு நாடுகளுமே ... மேலும் பார்க்க

Operation Sindoor: "இரு நாடுகளையும் நன்கு தெரியும்; அவர்கள்..." - இந்தியா - பாக். குறித்து ட்ரம்ப்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று முன்தினம் (அமெரிக்க நேரப்படி), அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இது ஒரு அவமானம்" என்று பதிலளித்திருந்தார்.மீண்டும், நேற்று ட்ரம்பி... மேலும் பார்க்க

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க