செய்திகள் :

Operation Sindoor: இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து கராச்சியை காலி செய்த தாவூத் இப்ராகிம் கும்பல்!

post image

Operation Sindoor: இந்தியா கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராகிம்

மும்பையில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகள் மற்றும் குடும்பத்தோடு பாகிஸ்தானில் மறைந்து வாழ்கிறான்.

தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளி சோட்டாசகீல், மனைவி, சகோதரன், மகனுடன் கராச்சியில் மிகவும் வசதியாக, ஐ.எஸ்.ஐ பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறான்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் அதிர்ச்சியடைந்தான்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பாதுகாப்பு

இந்தியா நீண்ட நாள்களாக தாவூத் இப்ராகிம் மீது குறிவைத்துள்ளது. இதையடுத்து தங்களது பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகள் சோட்டாசகீல் மற்றும் முன்னா ஜிங்கா ஆகியோருடன் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதில் முன்னா என்பவன் பாங்காக்கில் சோட்டாராஜன் மீது தாக்குதல் நடத்தியவன் ஆவான்.

தாவூத் இப்ராகிம்

தாவூத் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டிருக்கிறான். அவனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

தாவூத் இப்ராகிம் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டதாக திட்டமிட்டு பாகிஸ்தான் செய்தியை பரப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து இச்செய்தி உண்மையா என்பது குறித்து இந்திய புலனாய்வு ஏஜென்சிகள் புலனாய்வு செய்து வருகின்றன. ஆனால் இந்திய ராணுவம் தங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதி தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகளுடன் வேறு நாட்டிற்கு சென்று விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Indian Army: 'இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்' - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி | Photo Album

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEi... மேலும் பார்க்க

Sindoor: `இப்போது நாட்டுக்காக என் குங்குமத்தை அனுப்புகிறேன்’ - மணமகளின் வைரல் வீடியோவின் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானின், பச்சோரா தாலுகாவில் உள்ள புங்கானைச் சேர்ந்தவர் மனோஜ் தியானேஷ்வர் பாட்டீல். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மே 5 திங்கட்கிழமை பச்சோரா தாலுகாவில் உள்ள கலாம்சாரா கிராமத்... மேலும் பார்க்க

போர் ஒத்திகைப் பயிற்சி: "எனக்கு நாடுதான் முக்கியம்" - திருமணத்தை 2 மணி நேரம் தள்ளிவைத்த மணமகன்

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலைச் சமாளிக்க, அனைத்து மாநில அரசுகளும் போர் ஒத்திகையை நிகழ்த்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.அதன் அடிப்படையில், "போர்க்காலங்களின்போது இந்திய எல்ல... மேலும் பார்க்க

Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!

அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், "பொற்கோயில்" எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ... மேலும் பார்க்க

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது ... மேலும் பார்க்க

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மன... மேலும் பார்க்க