செய்திகள் :

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

post image

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இத்தகைய சூழலில், சரியாக பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது (மே 7).

Operation Sindoor
Operation Sindoor

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நேற்றிரவு, நமது இந்திய ஆயுதப்படைகள் தங்களின் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. மிகத் துல்லியமாகவும், எச்சரிக்கையுடனும் நடவடிக்கை எடுத்தன.

சரியான நேரத்தில் மிகத் துல்லியமாக இலக்குகளை அழிக்கத் தீர்மானித்தோம். அதேசமயம், பொதுமக்கள் இதில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நமது ஆயுதப்படைகள் சென்சிட்டிவாக இருந்தன.

நம் இந்திய வீரர்கள் துல்லியம், எச்சரிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றைக் காட்டினர். மொத்த நாட்டின் சார்பாக, வீரர்களையும் அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன்.

அசோக வனத்துக்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆபரேஷன் சிந்தூர் மூலம், தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை நமது ஆயுதப்படைகள் அழித்துவிட்டன. தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது.

தீவிரவாதிகளின் மனஉறுதியை உடைக்கும் நோக்கத்தில் அவர்களின் முகாம்கள் மீது மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது." என்று கூறினார்.

"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" - பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநி... மேலும் பார்க்க

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" - முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100... மேலும் பார்க்க

Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்..." - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின்.இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்... மேலும் பார்க்க

திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்கள்; ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மாணவர் சேர்க்கையில் முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை, மின்னணு ஏ... மேலும் பார்க்க

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

India - Pakistan: `அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி கடிதம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான... மேலும் பார்க்க