செய்திகள் :

Operation Sindoor: 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்; பஹாவல்பூரைக் குறிவைக்க என்ன காரணம்?

post image

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது.

ஒருகட்டத்தில் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் 'மக்களுக்குப் போர் பாதுகாப்புப் பயிற்சி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் `ஆப்பரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.

Operation Sindoor
Operation Sindoor

இந்தத் தாக்குதலில் 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 பாகிஸ்தானிலும் இருந்த தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த முப்படை தாக்குதல் நடவடிக்கையில் 'எந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களும் தாக்கப்படவில்லை' எனவும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தளம், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) தளம் ஆகிய இடங்கள் முக்கியமானவை.

ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் 1999-ல் விடுவிக்கப்பட்டதிலிருந்து, பஹாவல்பூர் நீண்ட காலமாக ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

இது தொடர்பாக வெளியான தகவலில், தீவிரவாதிகளின் தளங்களைத் துல்லியமாக உளவுத்துறை அமைப்புகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தொய்பா தலைமையகத் தளங்களை இந்தியப் படைகள் தாக்குதல்களுக்கான இடங்களாகத் தேர்வு செய்தன.

மேலும், தீவிரவாத முகாம்களைக் குறிவைக்கச் சிறப்புத் துல்லிய வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

'பதற்றம்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடை... மேலும் பார்க்க

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... மேலும் பார்க்க

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நட... மேலும் பார்க்க