செய்திகள் :

OPS : 'NDA விலிருந்து விலகல் - விஜய்யோடு கூட்டணி?' - ட்விஸ்ட் கொடுக்கும் ஓ.பி.எஸ்!

post image

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

'தனிக்கட்சியா?'

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். தனிக்கட்சி ஆரம்பிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, 'எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் எங்கள் உயிர்நாடி.' என்றார்.

'NDA விலிருந்து விலகல்!'

.

NDA கூட்டணியில் இன்னமும் இருக்கிறீர்களா எனும் கேள்விக்கு, 'சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கிறது. எதிர்காலத்தில் முடிவெடுப்போம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கும்.' என்றார்.

எடப்பாடி பழனிசாமியை இன்று விமர்சிக்கவே இல்லையே எனும் கேள்விக்கு, 'எடப்பாடி விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சிப்போம்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் வருத்தத்தில் இருக்கின்றனர். இன்றைய ஆட்சி அவலமாக இருக்கிறோம். அந்த ஆட்சியை போக்க ஒன்றிணைய வேண்டும்.

அதிமுகவில் இணைய நான் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ' என்றவர் மேலும், 'மதுரை மாநாட்டுக்கு சசிகலாவையும் தினகரனையும் நிச்சயம் அழைப்போம்.' என்றார்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

விஜய்யின் அரசியல் நகர்வு பற்றிய கேள்விக்கு, 'விஜய்யுடைய அரசியல் நகர்வு இன்று வரை நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவருடைய நகர்வைப் பொறுத்து எங்களுடைய தார்மீக ஆதரவு அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.' என பொடி வைத்துப் பேசினார்.

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.ஆனால், தெலுங்கு தேசம் கட்ச... மேலும் பார்க்க

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார். ப... மேலும் பார்க்க

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய க... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க