செய்திகள் :

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

post image

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பறந்து போ'.

இந்தப் படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய மாரி செல்வராஜ், "ராம் சார் எப்போதும் சீரியஸ் ஆகப் பேசுவதுபோலத்தான் வெளியே தெரியும்.

பறந்து போ
பறந்து போ

ஆனால் அவர் ஜாலியாகப் பேசுகின்ற விஷயங்கள் வெளியில் வருவது இல்லை. அதிகமாக இருவரும் சேர்ந்து காமெடி படங்களைத்தான் பார்ப்போம்.

'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்ச தந்திரம்' ஆகிய படங்களை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்போம். 'களவாணி' படம் வந்தபோது இந்த மாதிரி படம் எடு என்று என்னைச் சொன்னார்.

காமெடி சார்ந்து நிறைய விஷயங்களை இருவரும் பேசிக்கொள்வோம். எங்களை சீரியஸாக மாற்றியது ஈழப் பிரச்னைதான்.

2009-ல் நடந்த ஈழப்பிரச்னைக்குப் பிறகுதான் அவர் அரசியலைப் பேச ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து நிறைய அரசியலைப் பேசுவோம். அதுதான் எனது சினிமா பயணத்தை மாற்றி அமைத்தது.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

அதன்பிறகுதான் அரசியல் சார்ந்த கதைகளை எடுக்க நினைத்தேன். இல்லையென்றால் 'களவாணி' மாதிரியான ஒரு படத்தைத்தான் எடுத்திருப்பேன். அவர் சிரிக்கும்படியான கதைகளை எடுத்திருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" - சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan Cinema Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் ... மேலும் பார்க்க

'எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்குவது பெருமையாக இருக்கிறது!' - எஸ்.பி.முத்துராமன்

திரைக்கலைஞர்களின் திறமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களுக்கு வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருது விழா வெகுவிமர்சையாக நடந்... மேலும் பார்க்க

``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ்பு | Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.குஷ்புஅந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள்சென்னை டிரேட் சென்ட... மேலும் பார்க்க