செய்திகள் :

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

post image

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்

கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது.

அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழக்க, ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த விபத்திற்கான காரணம், இன்னும் சரியாக தெரியவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் இரண்டு கருப்பு பெட்டிகளைக் கொண்டது. ஒன்று ஜூன் 13-ம் தேதி மீட்கப்பட்டது. மற்றொன்று ஜூன் 16-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பெட்டிகளை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரலாம். மீட்கப்பட்ட இந்த இரண்டு பெட்டிகளும் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனால், அவை ஆய்வுக்காக அமெரிக்க அனுப்பப்பட இருக்கிறது என்று நேற்று செய்திகள் கசிந்தன.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

விமானப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், "விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), இந்த இரு கருப்பு பெட்டிகளையும் டெக்னிக்கல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக ஆய்வு செய்யும். இதில் கிடைக்கும் தரவுகளை வைத்தே, கருப்பு பெட்டிகள் இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படுமா அல்லது வெளிநாடு அனுப்பப்படுமா என்கிற முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தான், கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்யும் நவீன ஆராய்ச்சி மையம் டெல்லியில் திறக்கப்பட்டது. அதனால், இந்தக் கருப்பு பெட்டிகள் பெரும்பாலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தான் ஆய்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு வேளை கருப்பு பெட்டிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டால், அத்துடன் இந்திய குழு ஒன்றும் செல்லும் என்று கூறப்படுகிறது.

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்... மேலும் பார்க்க

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலைய... மேலும் பார்க்க

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க