செய்திகள் :

Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங்கதேச வீரர்!

post image

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர டேஜா, டெஸ்ட் கிர்க்கெட்டில் ஆல் ரவுண்டராக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தார்.

ஐபிஎல் சீசன் நடந்துகொண்டிருக்கையில் டெஸ்டில் இவ்வளவு பெரிய சாதனையை எப்படிப் படைத்திருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த சாதனை அப்படிப்பட்டது!

டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிப்பட்ட தரவரிசையில், நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக 1151 நாள்கள் நிலைத்திருந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா என்பதுதான் அந்த சாதனை.

ஜடேஜா
ஜடேஜா

இந்தியாவின் டெஸ்ட் கேப் நம்பர் 275 ரவீந்திர ஜடேஜா. இவர் தனது கணிக்க முடியாத சுழற்பந்து மற்றும் பேட்டிங் திறமை மூலம் இந்திய டெஸ்ட் வரலாற்றில் அழுத்தமாக தன் பெயரை பதிந்துள்ளார்.

ஒரு இடத்தை அடைவதை விட அதில் நிலைத்திருப்பதே பெரிய விஷயம் என்பர். ஜாடேஜா வேறேந்த வீரரும் நிலைத்திருக்காத அளவு நீண்ட நாள்கள் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருந்துள்ளார்.

எந்த சூழலிலும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதற்கும் அணி இவரை நம்பியிருக்கலாம் எனக் கூறும் அளவி கன்சிஸ்டண்டாக விளையாடிய வீரர் ஜடேஜா.

எந்த மைதானத்திலும் தனது அத்தியாவசியமான அரைசதம் அல்லது ஆட்டத்தைத் திருப்பும் 5 விக்கெட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய வரலாறு இவருக்கு உள்ளது.

Ravindra Jadeja -வை பின்னுக்குத் தள்ளுவாரா வங்கதேச வீரர்?

Mehidy Hasan Miraz
Mehidy Hasan Miraz

ஜடேஜாவின் ஆதிக்கம் முதலிடத்தில் இருந்தாலும், அமைதியாக தனக்கென இடத்தை பிடித்து, தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் வங்கதேச வீரர் மெஹிடி ஹசன் மிராஸ்.

இவர், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் 116 ரன்கள் எடுத்ததுடன் பௌலிங்கில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவரது கெரியரிலேயே அதிகபட்சமாக 327 புள்ளிகளை பெற்றுள்ளார்.

ஜடேஜாவை விட 73 புள்ளிகள் முன்னிலையில் 400 புள்ளிகளில் உள்ளார். புதிய போட்டியாளராக வந்துள்ள இந்த 27 வயது இளைஞர் ஜடேஜாவுக்கு சவாலாக இருப்பாரா? அல்லது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவரை இன்னமும் பின்னுக்குத்தள்ளுவாரா ஜடேஜா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

இது IPL இல்ல JPL; சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்காக உ.பி-யில் கிரிக்கெட் தொடர்!

ஐபிஎல் கொண்டாட்டம் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக சிறை வளாகத்துக்குள்ளேயே ஜெயில் பிரீமியர் லீக் (JPL) என்ற பெயரில் ... மேலும் பார்க்க

IPL: ``CSK உன்னை கவனிக்கிறது’ என அவர்தான் முதலில் சொன்னார்’ - ஆயுஷ் மாத்ரே சொல்லும் MI வீரர் யார்?

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், ... மேலும் பார்க்க

`செகண்ட் சான்ஸ் கேட்கும் அந்த வீரர், கோலி இடத்துக்குச் சரியானவர்’ - கும்ப்ளே கைகாட்டும் வீரர்

விராட் கோலியின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோலிக்கு முன்பாக ரோஹித்தும் ஓய்வை அறிவித்ததால், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் இங்கிலாந்து vs இந்... மேலும் பார்க்க

IPL 2025: 'DJ, பெண்கள் நடனம் போன்ற கொண்டாட்டங்கள் வேண்டாம்'- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பி... மேலும் பார்க்க

Kohli: `ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்; இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்' - கோலி குறித்து அஷ்வின்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கி... மேலும் பார்க்க

"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் சொல்கிறார் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இவ்வாறிருக்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின்... மேலும் பார்க்க