சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
Padai Thalaivan: `விஜயகாந்தின் கண்கள் அப்படியே...'- ரமணா 2 குறித்து அப்பேட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படைத்தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அன்பு, சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது,
”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் அவர்கள் செய்தார்கள்.
எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது" என்று கூறியிருந்தார்.
மேலும் தனது திருமணத்தின் போது விஜயகாந்த் அங்கு வந்தபோது பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தது குறித்தும் நினைவு கூர்ந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.
``விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.
விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம்" என்று பேசியிருந்தார் இயக்கநர் ஏ ஆர் முருகதாஸ்.