செய்திகள் :

RCB : 'சட்டமன்றம் டு சின்னசாமி ஸ்டேடியம்; ரோடு ஷோ நடத்தும் ஆர்சிபி!' - அப்டேட் என்ன?

post image

'பெங்களூரு சாம்பியன்...'

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை இது. இந்தத் தொடரை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என பெங்களூரு அணி லட்சியம் கொண்டிருந்தது.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில், பெங்களூரு அணி வெற்றிக் கோப்பையுடன் பெங்களூருவில் ரோடு ஷோ நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

'கோலி நெகிழ்ச்சி!'

பெங்களூருவின் வெற்றி உறுதியான தருணத்திலேயே மகிழ்ச்சியில் கோலி ஆனந்த கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். வெற்றிக்குப் பிறகும் ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். 'என்னுடைய இளமை, உச்சக்கட்ட ஆட்டம், அனுபவம் என எல்லாவற்றையும் இந்த அணிக்காக கொடுத்திருக்கிறேன். என்னுடைய இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருவுக்குதான்.

RCB
RCB

என்னுடைய கரியரின் கடைசி நாள் வரைக்கும் இந்த அணிக்காக மட்டுமே ஆடுவேன்.' எனக் கூறியிருந்தார். மேலும் பேசியவர், 'கெய்லும் டீவில்லியர்ஸூம் இந்த அணிக்காக தங்களின் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்போடு ஆடியிருக்கிறார்கள். இது அவர்களுக்குமான வெற்றிதான். அவர்களும் நாளை எங்களோடு பெங்களூரு வர வேண்டும்.' என்றார்.

Kohli
Kohli

இந்நிலையில், பெங்களூரு அணி சார்பில் ரோடு ஷோ நடத்தவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பெங்களூருவின் சட்டசபையிலிருந்து தொடங்கும் இந்த ரோடு ஷோ சின்னசாமி ஸ்டேடியத்தில் முடிவடைகிறது. மாலை 3:30 மணி முதல் ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

TNPL 2025: நம்ம விஜய் சங்கரா இது... பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்; திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2025 சீஸன் இரண்டாவது போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நேற்று இரவு மோதினார்கள். திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முத... மேலும் பார்க்க

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்... மேலும் பார்க்க

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கே... மேலும் பார்க்க