செய்திகள் :

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" - கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

post image

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.

பெங்களூரு
பெங்களூரு

அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்ச்சி செய்த கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேசன் (KSCA) மற்றும் ஆர்.சி.பி நிர்வாகம் இணைந்து இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "இன்றைய நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்களால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்திருக்கிறோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருக்கின்றன.

இந்தத் துயர சம்பவத்துக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். மேலும், இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.

RCB - KSCA அறிக்கை
RCB - KSCA அறிக்கை

தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆர்.சி.பி மற்றும் கே.எஸ்.சி.ஏ இணைந்து தலா 5 லட்சம் நிதியுதவி அளிக்கும்.

இது அவர்களின் இந்த துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆதரவையும், ஆறுதலையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.

இந்த இழப்பீடு மனித உயிரை மதிப்பைத் தீர்மானிக்கவோ அல்லது மாற்றவோ அல்ல. மாறாக இதுபோன்ற கடினமான நேரங்களில் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாகச் செயல்படுவதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். உங்களின் புரிதலுக்கு ஆதரவுக்கும் நன்றி" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை,... மேலும் பார்க்க

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க