செய்திகள் :

Rohit: ``மைதானத்தில் பேசுவது வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல..'' - ரோஹித் ஓப்பன் டாக்

post image

சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.

indian team

இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா சாம்பியன் டிராபியில் வென்ற பிறகு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "எங்களிடம் உறுதியான அணி இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள அவர்களுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்ன என்பது தெரியும். மைதானத்தில் இருக்கும்போது உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

அங்கு வைத்து பேசும் வார்த்தைகள் வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல. எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காகத்தான். வெற்றி அடைய நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் ஐந்து டாஸ்களிலும் தோற்றாலும் ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை. ஒரு தோல்வி கூட இல்லாமல் ஒரு தொடரை வெல்வது என்பது ஒரு பெரிய சாதனை, அது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது.

rohit sharma

உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் கோப்பையை வெல்லும் வரை நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியிலும் தோற்காமல் கோப்பையை வென்ற தருணம் எங்களுக்கு சிறப்பானதாக இருந்தது. அந்த வெற்றியை வார்த்தைகளில் சொல்வது கடினம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் ... மேலும் பார்க்க

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ... மேலும் பார்க்க

Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெ... மேலும் பார்க்க

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

IPL: “ஐபிஎல் போட்டிகளின்போது புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யக்கூடாது”- மத்திய அமைச்சகம் உத்தரவு

ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 2025 ... மேலும் பார்க்க

Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்

இந்தியா நியூசிலாந்து இடையே ஆன சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திரு... மேலும் பார்க்க