செய்திகள் :

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

post image

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு முன்னர் பீகாரின் 243 தொகுதிகளில் 7.93 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், தற்போது இந்த நடவடிக்கையில் தாங்கள் கேட்டிருந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து 7.23 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் உறுதி செய்துவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதற்கான பட்டியலை வெளியிட்டிருக்கும் தேர்தல் ஆணையம், வாக்காளர் தங்களின் பெயர்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது.

விடுபட்டவர்கள் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளக் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், "வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. நான் எப்படித் தேர்தலில் போட்டியிடுவது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மொத்தம் சுமார் 65 லட்சம், அதாவது சுமார் 8.5 சதவிகித வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் விளம்பரத்தை வெளியிடும்போதெல்லாம், பலர் இடம்பெயர்ந்துவிட்டனர், பலர் இறந்துவிட்டனர், பலர் போலி பெயர்களைக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கிய பட்டியலில் புத்திசாலித்தனமாக, எந்த வாக்காளரின் முகவரியையும், பூத் எண்ணையும், EPIC எண்ணையும் கொடுக்கவில்லை.

இதனால் வாக்காளர் பட்டியலிலிருந்து யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முடியாது" என்று கூறினார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இருப்பினும், தேஜஸ்வி யாதவ்வின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், "வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் 416 மற்றும் EPIC எண் RABO456228.

அவர் தனது பழைய EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடியிருக்கலாம், அதனால் தனது விவரங்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை." கூறியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

'தி கேரளா ஸ்டோரிஸ்' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். ``கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்... மேலும் பார்க்க

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க