செய்திகள் :

Sister Hong: 1600 -க்கும் மேற்பட்ட ஆண்கள்; பாலியல் வீடியோவை விற்ற நபர் கைது - தொடரும் சிக்கல்

post image

சீனாவின் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'சிஸ்டர் ஹாங்' விவகாரம். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

சிஸ்டர் ஹாங் எனும் பெயரில் இருக்கும் ஒருவர் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களைச் சந்தித்து பாலியல் உறவில் இருந்திருக்கிறார். அதை அவர்களின் அனுமதி இல்லாமல் படம் பிடித்து சில சமூக ஊடகங்களுக்கு விற்றிருக்கிறார். அந்த வீடியோக்களில் சில, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிஸ்டர் ஹாங்-கை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தது.

சிஸ்டர் ஹாங்
சிஸ்டர் ஹாங்

அப்போதுதான் சிஸ்டர் ஹாங் என்பவர் பெண்ணே அல்ல. அவர் பெண் போல வேடமிட்டு, மேக்கப், விக் என சகலமும் அணிந்து ஆண்களை ஏமாற்றியிருக்கிறார். 38 வயதான அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. டேட்டிங் செயலிகள், ஆன்லைன் சமூக ஊடகங்கள் மூலம் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கான ஆண்களை சந்தித்திருக்கிறார். ஒரு தகவலின்படி சுமார் 1600 ஆண்களை அவர் சந்தித்து வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த வீடியோக்களை காண வேண்டுமானால் 150 யுவான் (21 டாலர்) பணம் வசூலித்திருக்கிறார். வெளியான வீடியோவால் பாதிக்கப்பட்டவர்கள் அறிமுகமானவர்களாலும், மனைவிகளாலும், காதலிகளாலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் விளைவாக விவாகரத்து தாக்கல்கள் உட்பட தனிப்பட்ட விளைவுகள் அதிகரித்திருக்கின்றன. இந்த விவகாரத்தால் தனியுரிமை கடுமையாக மீறப்படுவதைக் காரணம் காட்டி, அந்த வீடியோகளை பகிர்வதை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

தேனியில் மணல் திருட்டு விவகாரம் - புகார் கொடுக்கும் உரிமை யாருக்கு? - குழப்பத்தில் அதிகாரிகள்

தேனி கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் தேனி தாசில்தார் சதீஷ்குமார் ... மேலும் பார்க்க

பீகார்: ஊர்க்காவல் படை தேர்வில் மயக்கமடைந்த பெண்; ஆம்புலன்ஸில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள போதிகயா என்ற இடத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டத... மேலும் பார்க்க

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க